search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்குளியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ஊத்துக்குளியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை

    ஊத்துக்குளியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம்:

    கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் முத்துப் பாண்டி (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முத்துப்பாண்டி காங்கயம் அடுத்துள்ள ஊத்துக்குளியில் உள்ள ஒரு ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வந்த முத்துப் பாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்துக்கு பணம் அனுப்பாமல் செலவு செய்து வந்தார். இதில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த முத்துப்பாண்டி ஓட்டல் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்துக்குளி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×