search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்யல் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது
    X

    நொய்யல் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது

    நொய்யல் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல் அருகே மரவாபாளையம் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது பாட்டில்களைவிற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது நொய்யலை சேர்ந்த மகுடேஸ்வரன் (45) என்பவர் மதுவிற்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் மசக்கவுண்டன்புதூர் பிரிவு அருகே போலீசார் ரோந்து சென்ற போது அங்கு அனுமதியின்றி மதுவிற்ற ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த விகாத் (23) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்காகவைத்திருந்த 26 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கரூர் புன்னம்சத்திரம் அருகே பாண்டிபாளையத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், ஈரோடுமின்னாம் பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி (48) என்பவர் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து துரைசாமியை போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×