search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
    X

    கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள பைத்தன்பிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 45). இவரது மகள் சுவேதா(17). பிளஸ்-2 முடித்துவிட்டு சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சுவேதாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரது உடல் முழுவதும் தீயில் கருகியது. இதில் சம்பவ இடத்திலேயே சுவேதா இறந்தார்.

    இதுகுறித்து சின்ன சேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சுவேதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×