search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    தூத்துக்குடி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

    தூத்துக்குடி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி ஸ்பிக் நகர் அருகே உள்ள சுபாஷ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 80). கூலி தொழிலாளி. இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை.

    எனவே வாழ்க்கையில் விரக்தியடைந்த சங்கரன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×