search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 8½ பவுன் செயின் பறிப்பு
    X

    முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 8½ பவுன் செயின் பறிப்பு

    கோவை அருகே முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 8½ பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் சேவியர் பெர்னாண்டோ. இவரது மனைவி ஜாக்குலின் சத்யா (வயது 52).

    சம்பவத்தன்று இவர் வீட்டு முன்புறம் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டு கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் ஜாக்குலின் சத்யாவிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த 11 பவுன் தங்க செயினை கண்இமைக்கும் நேரத்தில் பறித்தனர்.

    இதில் உஷாரான அவர் செயினை பிடித்தார். அப்போது 2½ பவுன் செயின் துண்டு மட்டுமே ஜாக்குலின் சத்யா கையில் சிக்கியது. வாலிபர்கள் கையில் கிடைத்த 8½ பவுன் தங்க செயினுடன் தப்பிச் சென்றனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த ஜாக்குலின் சத்யா இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×