search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவி மாயம்
    X

    சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவி மாயம்

    சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அருள் ஜான்சன். இவரது மனைவி கிறிஸ்டி பாக்கிய ஷீலா(வயது 41). இவர்களுக்கு ஞான எல்சி கிறிஸ்டி(17) என்கிற மகள் உள்ளார். இவர் அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    கடந்த 17-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை.

    இந்நிலையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் நேற்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குபதிவு செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×