என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்24 Jun 2019 2:34 AM GMT (Updated: 24 Jun 2019 2:34 AM GMT)
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரள மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனால் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வெப்பக்காற்றின் அளவும் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலையை பொருத்தமட்டில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசுமாக இருக்கும்.
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலா ஆகிய பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டரும், காஞ்சீபுரத்தில் 2 சென்டி மீட்டர் அளவும் மழை பெய்து உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரள மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனால் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வெப்பக்காற்றின் அளவும் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலையை பொருத்தமட்டில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசுமாக இருக்கும்.
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலா ஆகிய பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டரும், காஞ்சீபுரத்தில் 2 சென்டி மீட்டர் அளவும் மழை பெய்து உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X