search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்- பா.வளர்மதி பதிலடி
    X

    தி.மு.க.வின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்- பா.வளர்மதி பதிலடி

    சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முதல்வர் பழனிசாமி முயற்சி செய்கிறார். ஆனால் திமுகவினர் நடத்தும் போராட்டத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று பா வளர்மதி துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    துரைமுருகன் கூறியதற்கு அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    "துரைமுருகன் நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர், அமைச்சராக பணியாற்றியவர். சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல வழிகளில் முயற்சி செய்கிறார். அதற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பதே தி.மு.க.வின் நோக்கம் என்பதை துரைமுருகன் வெளிப்படுத்தி இருக்கிறார். 

    ஒரு பக்கம் தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். மறு பக்கத்தில் தண்ணீர் கொண்டு வருவதை தடுக்கிறார்கள். தி.மு.க.வின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்'' என்றார்.
    Next Story
    ×