search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டையிலிருந்து ரெயிலில் தண்ணீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும்- துரைமுருகன் எச்சரிக்கை
    X

    ஜோலார்பேட்டையிலிருந்து ரெயிலில் தண்ணீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும்- துரைமுருகன் எச்சரிக்கை

    ஜோலார்பேட்டையிலிருந்து ரெயிலில் தண்ணீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்  என திமுக பொருளாளர் துரைமுருகன், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    மேலும் அவர் கூறியதாவது:- நிர்வாகம் நடத்த முடியாவிட்டால் அரசு வெளியேற வேண்டும், இல்லையெனில் மக்கள் வெளியேற்றுவார்கள். தங்களால் தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை என்பதை அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தண்ணீர் பிரச்னை தொடர்பாக திமுக எடுத்துரைக்கும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×