search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே ரெயில் மோதி முதியவர் பலி
    X

    வில்லியனூர் அருகே ரெயில் மோதி முதியவர் பலி

    வில்லியனூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது ரெயில் மோதியதில் உடல் நசுங்கி இறந்து போனார்.

    வில்லியனூர்:

    திருவண்ணாமலை மதுராம்பட்டை சேர்ந்தவர் பழனி (வயது 70). இவர் தனது மனைவி விருத்தாம்பாளுடன் வில்லியனூர் அருகே உள்ள நடராஜர் நகரில் உள்ள தனது மருமகன் வைத்திலிங்கம் வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அரும்பார்த்தபுரம் வரை நடைபயிற்சி சென்றார். காலை 6.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த பயணிகள் ரெயில் வந்தது.

    பழனிக்கு காது கேட்காது. அதனால் ரெயில் வரும் சத்தம் கேட்காமல் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ரெயில் மோதி உடல் நசுங்கி பழனி இறந்து போனார்.

    இது குறித்து வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு குப்புசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×