என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீசாருக்கான ரத்ததான முகாம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்21 Jun 2019 4:50 AM GMT (Updated: 21 Jun 2019 4:50 AM GMT)
தமிழகத்தில் போலீசாருக்கான ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதிலும் 89 இடங்களில் ரத்ததான முகாம் நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் போலீசாருக்கான ரத்த தான முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மே மாதம் விடுமுறை காலம் என்பதால் கொடையாளர்களிடம் ரத்த தானம் பெறும் அளவு குறைகிறது. எனவே, தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜூன் மாதத்தில் போலீசாரிடம் ரத்ததானம் பெற்று ரத்த வங்கிகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதன்முதலாக போலீசாருக்கான ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போலீஸ் ரத்ததான முகாம் இன்று தமிழகம் முழுவதும் 89 இடங்களில் நடைபெறுகிறது. இதில் ஏராளமான போலீசார் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த ரத்த தான முகாமை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ரத்ததான முகாம்களில் கலந்துகொண்டு ரத்த தானம் செய்யுமாறு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் போலீசாருக்கான ரத்த தான முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மே மாதம் விடுமுறை காலம் என்பதால் கொடையாளர்களிடம் ரத்த தானம் பெறும் அளவு குறைகிறது. எனவே, தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜூன் மாதத்தில் போலீசாரிடம் ரத்ததானம் பெற்று ரத்த வங்கிகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதன்முதலாக போலீசாருக்கான ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போலீஸ் ரத்ததான முகாம் இன்று தமிழகம் முழுவதும் 89 இடங்களில் நடைபெறுகிறது. இதில் ஏராளமான போலீசார் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த ரத்த தான முகாமை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரத்ததான முகாம்களில் கலந்துகொண்டு ரத்த தானம் செய்யுமாறு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X