என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே ஓட்டல் கடை உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்20 Jun 2019 4:13 PM GMT (Updated: 20 Jun 2019 4:13 PM GMT)
காவேரிப்பட்டணம் அருகே ஓட்டல் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சப்பாணிப்பட்டியில் மசூதி நகரைச் சேர்ந்தவர் ராஜவேலு (வயது 50). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். 2 மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
சப்பாணிப்பட்டியில் ராஜவேலு சொந்தமாக ஓட்டல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ராஜவேலுவும், அவரது மனைவி மஞ்சுளாவும் வீட்டை பூட்டி விட்டு ஓட்டல் கடைக்கு சென்றனர். மதியம் 1 மணியளவில் மஞ்சுளா மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் தனது கணவர் ராஜவேலுவுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும், தனது கடைசி மகள் தன்னிடம் கொடுத்த வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் ராஜவேலு வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். ராஜவேலுவும், மஞ்சுளாவும் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர்கள் சென்றபிறகு வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளையும், ரூ.40 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்பாணிப்பட்டியில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு இந்த பகுதியில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X