search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டி அருகே அரிவாளை காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை பறிப்பு
    X

    கோவில்பட்டி அருகே அரிவாளை காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை பறிப்பு

    கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியிடம் மர்ம நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு அருகே புதுக்கோட்டையில் உள்ள தங்களது வீட்டிற்கு சென்று விட்டு திரும்பினர்.

    அப்போது நாலாட்டின் புதூர் அருகே வரும் போது 3 மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, செல்போன், ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து முருகேசன் நாலாட்டின்புதூர் போலீசில் புகார் செய்தார். 

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தம்பதியிடம் நகை- பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×