search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போத்தனூரில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
    X

    போத்தனூரில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது

    போத்தனூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை போத்தனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வெள்ளலூர்- மகாலிங்கபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினார். வேகமாக வந்த வாலிபர் மகாலிங்கபுரத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 24) என்பதும், அவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. 

    இதனையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் சிறப்பு சப-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி தாக்க முயன்றார். இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×