search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக எடப்பாடி பழனிசாமிக்கு இன்று சிகிச்சை
    X

    ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக எடப்பாடி பழனிசாமிக்கு இன்று சிகிச்சை

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் இன்று 2-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடந்தது. அதன் பிறகு வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் இன்று அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று 2-வது நாளாக சிகிச்சை பெற்றார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
    Next Story
    ×