search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரூப் 1 தேர்வுக்கு ரத்துகோரிய வழக்கு -தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்
    X

    குரூப் 1 தேர்வுக்கு ரத்துகோரிய வழக்கு -தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்

    டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேரை ரத்து செய்யக்கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 எனும் அரசு பணியாளர்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி, விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    முன்னதாக இந்த வழக்கை நீதிபதி பார்த்திபன் விசாரித்தார். இதனை ஜூன் 20ம்(இன்று) தேதிக்கு ஒத்தி வைக்குமாறு டிஎன்பிஎஸ்சி சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

    இதனை ஏற்று நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேதி ஏதும் குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×