search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவேரிப்பட்டணம் அருகே கூலி தொழிலாளி விபத்தில் பலி
    X

    காவேரிப்பட்டணம் அருகே கூலி தொழிலாளி விபத்தில் பலி

    காவேரிப்பட்டணம் அருகே மொபட் மீது டாட்டா சுமோ கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே எர்ரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 60) இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரான இவர் எர்ரஹள்ளில் உள்ள தனியார் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

     மாம்பழக்கூழ் தொழிற்சாலையிலிருந்து காவேரிப்பட்டணம் நோக்கி வரும்போது நேற்று மாலை 7 மணி அளவில் காவேரிபட்டினம் பிரிவு ரோட்டில் மொபட்டில் வந்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டாட்டா சுமோ எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியதில் தூக்கி எறியப்பட்ட இவரை பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. உடனே அங்கு இருப்பவர்கள் காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    பின்பு மேல் சிகிச்சைக்காக  கோவைக்கு எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் அவருக்கு உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகியதால் மீண்டும் காவேரிபட்டணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். அரசு மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது. பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம்  அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து காவேரிப்பட்டணம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×