search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் இளம்பெண்கள் மாயம்
    X

    திருச்சியில் இளம்பெண்கள் மாயம்

    திருச்சியில் கல்லூரிக்கு சென்ற இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கீழத்தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் விஷாலினி (வயது 17). இவர் புத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து உறையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி விஷாலினியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் திருச்சி பஞ்சப்பூரை சேர்ந்தவர் புவனேஸ்வரி (21). இவர் பஞ்சப்பூரில் உள்ள கிப்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு  சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி புவனேஸ்வரியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×