என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலி உயர்வை வழங்க வேண்டும் - நெசவாளர்கள் போராட்டம்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே சேத்தூர், முகவூர், முத்துசாமிபுரம், புனல் வேலி, தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
நெசவாளர்களின் தரத்தை உயர்த்தும் வகையிலும், உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும் கைத்தறி மாற்றப்பட்டு அரசு சார்பில், அனைவருக்கும் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பெடல் தறி வழங்கப்பட்டது. ஆனால் தறிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உற்பத்தி பொருட்கள் வழங்கப்படவில்லை.
மேலும் பெடல் தறி திட்டத்திற்கு மாற்றப்பட்டதில் இருந்து இதுவரை, கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் நாள் ஒன்றுக்கு ரூ. 150 மட்டுமே வருமானம் என்ற நிலையில் நெசவாளர்களின் வாழ்க்கை நகர்கிறது.
கைத்தறிக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி மற்றும் ரிபேட் போன்ற முறைகளும் நிறுத்தப்பட்டதால் நெசவாளர்களின் வருமானம் தற்போது கணிசமாக குறைந்துள்ளது.
மேலும் உற்பத்திக்கு தேவையான பாவு நூல் மற்றும் ஊடை நூலும் முறையாக வழங்கப்படுவதில்லை. குறைந்த அளவு வருமானத்தினால், மருத்துவ செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டை சீரமைத்தல் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை செலவுகள் கூட செய்ய முடியாத அவல நிலையில் நெசவாளர்கள் உள்ளனர்.
எனவே கடந்த 8 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ள கூலி உயர்வை வழங்க வேண்டும், ஆண்டு முழுவதும் வேலை, முதியோர் உதவி தொகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெசவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தூர் பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்