search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாராயக்கடை அருகே அழுகி கிடந்த ஆண்பிணம்
    X

    சாராயக்கடை அருகே அழுகி கிடந்த ஆண்பிணம்

    திருக்கனூர் அருகே உள்ள மணலிப்பேட்டில் சாராயக்கடை அருகே அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடைப்பதாக போலீசார் தவகவல் வந்தது. போலீசார் பிணத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள மணலிப்பேட்டில் சாராயக்கடை ஒன்று உள்ளது. இதன் அருகே உள்ள வேப்பமரத்திற்கு கீழே ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

    இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    அந்த நபருக்கு 45 வயது இருக்கும். அவருடைய சட்டை பாக்கெட்டில் வி‌ஷப் பாட்டில் ஒன்று இருந்தது. எனவே சாராயத்துடன் வி‌ஷத்தை கலந்து குடித்து விட்டு அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது. பிணம் அழுகிய நிலையில் இருந்தது.

    மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அவரது உடலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்று இதுவரை தெரியவில்லை. எனவே காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    மேலும் தமிழக போலீசாருக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் வேலு இதுபற்றி விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×