என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாராயக்கடை அருகே அழுகி கிடந்த ஆண்பிணம்
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே உள்ள மணலிப்பேட்டில் சாராயக்கடை ஒன்று உள்ளது. இதன் அருகே உள்ள வேப்பமரத்திற்கு கீழே ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அந்த நபருக்கு 45 வயது இருக்கும். அவருடைய சட்டை பாக்கெட்டில் விஷப் பாட்டில் ஒன்று இருந்தது. எனவே சாராயத்துடன் விஷத்தை கலந்து குடித்து விட்டு அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது. பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அவரது உடலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்று இதுவரை தெரியவில்லை. எனவே காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.
மேலும் தமிழக போலீசாருக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் வேலு இதுபற்றி விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்