search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி
    X

    தஞ்சையில் மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி

    தஞ்சையில் பிறந்த குழந்தையை பார்க்க வந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கிழக்கு அலங்கத்தை சேர்ந்தவர் மகேஷ் கண்ணன் (வயது 32). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லட்சுமிக்கு சமீபத்தில் தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக மகேஷ்கண்ணன் சிவகங்கையில் இருந்து தஞ்சைக்கு வந்தார். அப்போது வீட்டின் பால்கனிக்கு நடந்து சென்றார். அங்கு திடீரென கால்தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மகேஷ்கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து லட்சுமி மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை பார்க்க வந்த போது தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×