search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 3-வது மாடியில் தூங்கிய ஆட்டோ டிரைவர் உருண்டு விழுந்து பலி
    X

    கோவையில் 3-வது மாடியில் தூங்கிய ஆட்டோ டிரைவர் உருண்டு விழுந்து பலி

    கோவையில் 3-வது மாடியில் தூங்கிய ஆட்டோ டிரைவர் உருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெய்சங்கர் (25). இவர் கோவை வெரைட்டி ஹால் அருகே உள்ள உள்ள ராமகிருஷ்ணா புரம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து அறைக்கு திரும்பிய ஜெய்சங்கர் 3-வது மாடியில் படுத்து தூங்கினார். கைப்பிடி இல்லாத மொட்டை மாடியில் தூங்கிய அவர் இரவு தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்தார். இதில் பலத்தகாயம் அடைந்த ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து இறந்த ஜெய்சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்ததும் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×