என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் செயின் பறிப்பு
Byமாலை மலர்19 Jun 2019 9:18 AM GMT (Updated: 19 Jun 2019 9:18 AM GMT)
புளியங்குடி அருகே அதிகாலை நேரத்தில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் செயின் பறித்த சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி திருவளர் செல்வி(வயது 29). சம்பவத்தன்று திருவளர்செல்வியும் அவரது மாமியாரும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் திருவளர்ச்செல்வி மற்றும் அவரது மாமியார் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருவளர்ச்செல்வி கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திருவளர்ச்செல்வி புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி திருவளர் செல்வி(வயது 29). சம்பவத்தன்று திருவளர்செல்வியும் அவரது மாமியாரும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் திருவளர்ச்செல்வி மற்றும் அவரது மாமியார் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருவளர்ச்செல்வி கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திருவளர்ச்செல்வி புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X