என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வத்தலக்குண்டுவில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை திருட்டு
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு விசாலாட்சியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் மோகன். இவர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். இவரது மனைவி நாகஜோதி.நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் மாடிப்படி வழியாக வீட்டிற்குள் இறங்கிய மர்ம நபர் நாகஜோதி கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடினான். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த நாகஜோதி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அவன் தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கடந்த வாரம் தி.மு.க. பிரமுகர் முருகேசன் என்பவரது மனைவியிடமும் இதேபோல் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கிலும் கொள்ளையர் பிடிபடவில்லை.
மேலும் ரோட்டில் நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன் பறிப்பும் தொடர்ந்து நடந்த வருகிறது. இதுபோன்ற கொள்ளை சம்பவங்களால் வத்தலக்குண்டு நகரில் பெண்கள் மற்றும் வணிகர்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்