search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    கோவையில் காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

    கோவையில் கணவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் பிரதீப்ராஜ். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரம்யா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    வேலைக்கு செல்லும் பிரதீப்ராஜ் தினசரி இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனை ரம்யா கண்டித்தார். இதனால் அடிக்கடி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பிரதீப்ராஜ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனம் உடைந்த ரம்யா சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ரம்யாவை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் திருமணமான 8 மாதத்தில் ரம்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×