என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூரில் இளம்பெண் மர்ம மரணம்- காதலனிடம் போலீஸ் விசாரணை
Byமாலை மலர்19 Jun 2019 9:00 AM GMT (Updated: 19 Jun 2019 9:00 AM GMT)
கோவை மாவட்டம் சூலூரில் இளம்பெண் மர்மமாக உயிரிழந்தது குறித்து காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் காவேரி (வயது 21). இவர் பல்லடத்தில் பெற்றோருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினார். அப்போது பொன்னுசாமி என்பவருடன் திருமணம் ஆனது. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் காவேரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ரபீக் (30) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. 1 வருடம் பழகி வந்தனர். இந்நிலையில் ரபீக்குடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு காவேரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்தார். காவேரியை பின் தொடர்ந்து வந்த ரபீக் சூலூரில் அவரை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்தார். ஆனால் காவேரி மறுத்தார். தொடர்ந்து ரபீக் வலியுறுத்தினார்.
இதனால் விரக்தியடைந்த காவேரி சாணிப்பவுடரை குளிர்பானத்தில் கலந்து குடித்து விட்டதாக கூறி ரபீக் சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிசிச்சை பலனின்றி காவேரி பரிதாபமாக இறந்தார். தகவல் கிடைத்ததும் காவேரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூலூருக்கு வந்தனர். காவேரி சாவில் மர்மம் உள்ளதாக கூறி ரபீக்கிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதும் சூலூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் காவேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவேரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் காவேரி (வயது 21). இவர் பல்லடத்தில் பெற்றோருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினார். அப்போது பொன்னுசாமி என்பவருடன் திருமணம் ஆனது. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் காவேரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ரபீக் (30) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. 1 வருடம் பழகி வந்தனர். இந்நிலையில் ரபீக்குடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு காவேரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்தார். காவேரியை பின் தொடர்ந்து வந்த ரபீக் சூலூரில் அவரை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்தார். ஆனால் காவேரி மறுத்தார். தொடர்ந்து ரபீக் வலியுறுத்தினார்.
இதனால் விரக்தியடைந்த காவேரி சாணிப்பவுடரை குளிர்பானத்தில் கலந்து குடித்து விட்டதாக கூறி ரபீக் சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிசிச்சை பலனின்றி காவேரி பரிதாபமாக இறந்தார். தகவல் கிடைத்ததும் காவேரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூலூருக்கு வந்தனர். காவேரி சாவில் மர்மம் உள்ளதாக கூறி ரபீக்கிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதும் சூலூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் காவேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவேரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X