என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காவேரிப்பட்டணத்தில் ஏடிஎம் கார்டு எண்கேட்டு ரூ.78 ஆயிரம் நூதன கொள்ளை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், அகரம் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவர் அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 73280-68210 என்ற செல்போன் எண்ணில் இருந்து இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 9-ந் தேதி ஒருவர் பேசிஉள்ளார். அப்போது அவர் நான் இந்தியன் வங்கி மேனேஜர் பேசுகிறேன். உங்கள் ஏ.டி.எம். கார்டு லாக் ஆகிவிட்டது. அதை சரிசெய்ய வேண்டும் எனக்கூறி, ஏ.டி.எம். கார்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவலையும் இவரிடம் இருந்து பெற்றுள்ளார்.
இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 78,489-ஐ தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துவிட்டதாக இவரது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து இந்தியன் வங்கிக்கு சென்று கூறியுள்ளார். அதுபோல் நாங்கள் யாரும் பேசவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவருக்கு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மீண்டும் பேசியுள்ளார். எதிரில் பேசிய அந்த மர்மநபர், நாகராஜை மிரட்டியதுடன், ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதுகுறித்து நாகராஜ் நேற்று காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்