என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் நிதி நிறுவனத்தில் ரூ.42 லட்சம் மோசடி - மானேஜர் தலைமறைவு
திருப்பூர்:
திருப்பூர் பி.என்.ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களிடம் மாதச்சீட்டு, வாரச்சீட்டு வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் சக்திவேல் திருப்பூருக்கு வந்து நிறுவனத்தில் திடீர் ஆய்வு மற்றும் தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது வாடிக்கையாளர்கள் செலுத்திய ரூ.42 லட்சம் வரவு வைக்காமல் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து நிதி நிறுவன மேலாளர் சுரேஷ்கண்ணன் (வயது 34) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் உரிய பதில் கூறவில்லை. திடீரென தலைமறைவானது தெரியவந்தது.
இதனையடுத்து மண்டல மேலாளர் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில் வாடிக்கையாளர்கள் செலுத்திய ரூ.42 லட்சம் பணத்தை வங்கி மேலாளர் சுரேஷ்கண்ணன் கையாடல் செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன மேலாளர் சுரேஷ்கண்ணனை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்