search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணமங்கலம் அருகே வாட்டர் சர்வீஸ் கடையில் திருட்டு
    X

    கண்ணமங்கலம் அருகே வாட்டர் சர்வீஸ் கடையில் திருட்டு

    கண்ணமங்கலம் அருகே வாட்டர் சர்வீஸ் கடையில் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் அம்மாபாளையம் கூட் ரோட்டில் வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று வேலை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். கடையை நோட்ட மிட்ட மர்ம கும்பல் கடையின் பூட்டை உடைத்து கஜானாவில் இருந்த ரூ.7 ஆயிரம் திருடி சென்றனர். இன்று காலை கடைக்குவந்த மணி கடையின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.கடையின் உள்ளே சென்று பார்த்த போது பணம் திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து மணி கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×