search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கம் அருகே லாரியில் சிக்கி விவசாயி பலி
    X

    செங்கம் அருகே லாரியில் சிக்கி விவசாயி பலி

    செங்கம் அருகே லாரி விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    செங்கம் அடுத்த கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (48) விவசாயி. இவர் தனது வீட்டிலிருந்து செங்கத்திற்கு செல்ல பைக்கில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

    காயம்பட்டு கூட்ரோடு அருகே வந்தபோது பைக் நிலைதடுமாறியதில் எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதினார். இதில் லாரியின் டயரில் நசுங்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உடலை மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×