search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் கம்மலுக்காக மூதாட்டி கொலை? - போலீசார் விசாரணை
    X

    கோவையில் கம்மலுக்காக மூதாட்டி கொலை? - போலீசார் விசாரணை

    கோவையில் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை காந்தி பார்க் சலீவன் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ரங்கநாயகி (60). இவர் நேற்று மாலை வீட்டில் மயங்கி கிடந்தார்.

    அவரது தலை, முகத்தில் பலத்த காயம் இருந்தது. அவர் காதில் அணிந்திருந்த கம்மல் மாயமாகி இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரங்கநாயகியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ரங்கநாயகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெரைட்டி ஹால் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கநாயகி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கீழே தள்ளி விட்டு கம்மலை பறித்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×