என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியகுளத்தில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடித்த கும்பல்
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் பாரதிநகரை சேர்ந்தவர் ஆசின் (வயது45). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து 2 பவுன் தங்க நகைகள், ரூ.42,500 ரொக்க பணம், டேப்லட் ஆகியவற்றை திருடிச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்த ஆசின் வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் உத்தமபாளையம் அருகில் உள்ள அனுமந்தன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமாலை. இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது கடையில் புகுந்த நபர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து பூமாலை உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கடையில் திருடிய அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், அஜித் உள்பட 3 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்