search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் அருகே வாகன சோதனையில் 1,250 குரோஸ் பட்டாசு திரிகள் பறிமுதல் - 4 பேர் கைது
    X

    விருதுநகர் அருகே வாகன சோதனையில் 1,250 குரோஸ் பட்டாசு திரிகள் பறிமுதல் - 4 பேர் கைது

    விருதுநகர் அருகே வாகன சோதனையின்போது கடத்தப்பட்ட 1,250 பட்டாசு திரிகளை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், வச்சக்காரபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோக்சனா மற்றும் போலீசார் கட்டநார்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி சட்ட விரோதமாக 850 குரோஸ் பட்டாசு திரிகள் கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து பட்டாசு திரிகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை கடத்தி வந்த பிச்சைகனி (வயது 45), சோலையப்பன் (27), மருதமூர்த்தி (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    வச்சகாரபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கன்னிசேரி-நாரணாபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 400 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ரவிச்சந்திரன் (50) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×