search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே பெண்ணிடம் கத்திமுனையில் 10 பவுன் நகை கொள்ளை
    X

    மதுரை அருகே பெண்ணிடம் கத்திமுனையில் 10 பவுன் நகை கொள்ளை

    பெண்ணிடம் கத்தி முனையில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை கருப்பாயூரணியை அடுத்த காளிகாப்பான் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ரோவின்ஸ் மனைவி சிந்தா (வயது25). இவர் மகளுடன் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதன் கத்திமுனையில் வழிமறித்து உள்ளான். அவன் சிந்தாவிடம் நகைகளை கழற்றி கொடுங்கள். இல்லையேல் குத்திக் கொன்று விடுவேன் என்று மிரட்டினான்.

    இதனால் பயந்துபோன சிந்தாதான் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை கழற்றி கொடுத்து உள்ளார். அதன் பிறகு கொள்ளையன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான்.

    இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×