search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சியாகிறது ஆவடி- தமிழக அரசு அரசாணை வெளியீடு
    X

    மாநகராட்சியாகிறது ஆவடி- தமிழக அரசு அரசாணை வெளியீடு

    தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், ஒசூர், ஆகிய 14 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நகராட்சியாக இருந்த ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்பட நகராட்சிகள் இணைக்கப்பட்டு ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×