search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகராட்சி வணிக வளாகத்தில் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை
    X

    நகராட்சி வணிக வளாகத்தில் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை

    நகராட்சி வணிக வளாகத்தில் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் நாகராஜன் (வயது 38). விவசாயி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகராஜன் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் குணம் அடைய வில்லை. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட வில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து கூடலூருக்கு வந்தார். பின்னர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் நின்றிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வி‌‌ஷம் குடித்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    இதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் பழைய பஸ் நிலையத்தில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து ஒரு ஆட்டோவில் நாகராஜனை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×