search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரூரில் விபத்து- விவசாயி பலி
    X

    அரூரில் விபத்து- விவசாயி பலி

    அரூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த மருதிப்பட்டி அருகே உள்ள பூச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 50). விவசாயியான இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஊத்தங்கரை - அரூர்  சாலையில் சென்று கொண்டிருந்தார். 

    அரூர் வட்டார போக்குவரத்து அலுவலக ரோட்டின் வளைவில் வரும்பொழுது நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து அரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×