search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தூர் அருகே அரசு பஸ் கண்டக்டர் மனைவியிடம் 5 பவுன் நகை-பணம் திருட்டு
    X

    மத்தூர் அருகே அரசு பஸ் கண்டக்டர் மனைவியிடம் 5 பவுன் நகை-பணம் திருட்டு

    மத்தூர் அருகே சந்தைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்ற அரசு பஸ் கண்டக்டர் மனைவியிடம் 5 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கீழ்வீதியில் வசித்து வருபவர் செல்வநாயகம் (வயது47). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஞானசவுந்தரி. இவர் போச்சம்பள்ளி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஞானசவுந்தரி நேற்று போச்சம்பள்ளி வாரச் சந்தைக்கு சென்றார். அப்போது ஞானசவுந்தரி தனது மணிபர்சில் 5 ஆயிரத்து 500 பணமும், 5 பவுன் தங்க தாலி செயினையும் வைத்து கொண்டு சென்றுள்ளார். பின்னர் அவர் பொருட்கள் வாங்கி விட்டு மத்தூர் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது ஞானசவுந்தரி தனது பர்சை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த பணம், நகை ஆகியவை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ஞானசவுந்தரி மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×