search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலத்தில் ரூ.10 லட்சம் மோசடி - தந்தை, மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு
    X

    திருமங்கலத்தில் ரூ.10 லட்சம் மோசடி - தந்தை, மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு

    திருமங்கலத்தில் ரூ.10 லட்சம் மோசடி புகாரில் தந்தை-மகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அதே பகுதியில் உள்ள நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம், பொதுச் சொத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

    இந்த நிலையில் சொத்தை பிரிக்கும் நிலை வந்தபோது ஆறுமுகம் கடன் பற்றி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் வசிக்கும் ஆறுமுகத்தின் சகோதரி பேச்சியம்மாளின் கணவர் முருகேசன் (வயது 52) ரூ.10 லட்சத்தை சுப்பிரமணியனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டவர் சொத்து பத்திரத்தை கொடுக்காமல் இழுத்தடித்தார்.

    இதனால் தன்னை மோசடி செய்ததாக சுப்பிரமணியன் மீது திருமங்கலம் நகர் போலீசில், முருகேசன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சுப்பிரமணியன், அவரது தம்பி திருப்பதி, மகன் முருகன் (36) மற்றும் மணிமாறன் (55) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×