என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்17 Jun 2019 9:38 AM GMT (Updated: 17 Jun 2019 9:38 AM GMT)
அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே காவலூர் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் செந்தமிழ்ச்செல்வன் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக காவலூர் வந்தவர் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் மாடியிலிருந்து கீழே இறங்கியவர் எதிர்பாராத விதமாக வீட்டிற்கு செல்லும் மின் ஒயரை கையால் பிடித்துள்ளார். அப்போது செந்தமிழ்ச்செல்வன் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்து செந்தமிழ்ச்செல்வன் மனைவி மங்கையற்கரசி கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பேட்டை அருகே காவலூர் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் செந்தமிழ்ச்செல்வன் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக காவலூர் வந்தவர் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் மாடியிலிருந்து கீழே இறங்கியவர் எதிர்பாராத விதமாக வீட்டிற்கு செல்லும் மின் ஒயரை கையால் பிடித்துள்ளார். அப்போது செந்தமிழ்ச்செல்வன் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்து செந்தமிழ்ச்செல்வன் மனைவி மங்கையற்கரசி கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X