search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் குழந்தை பிறந்ததால் மனைவியுடன் வாழ மறுத்த கணவர்- போலீசில் மாமியார் புகார்
    X

    பெண் குழந்தை பிறந்ததால் மனைவியுடன் வாழ மறுத்த கணவர்- போலீசில் மாமியார் புகார்

    ராமாபுரத்தில் பெண் குழந்தை பிறந்ததால் மனைவியுடன் வாழ மறுத்த கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் மாமியார் புகார் அளித்துள்ளார்.
    போரூர்:

    ராமாபுரம், ஆண்டவர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கங்கா. இவர் வடபழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    எனது மகள் லட்சுமிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சுதன்ராஜ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. மகள் லட்சுமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

    இது அவரது கணவர் சுதன்ராஜிக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த 15-ந்தேதி நாங்கள் மகளுக்கு சீர்வரிசையாக கொடுத்த பொருட்களுடன் எங்கள் வீட்டிற்கு வந்த சுதன்ராஜ் எனது மகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

    மேலும் எனது மகளுடன் இனி வாழ மாட்டேன் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார். எனவே சுதன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×