என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கரூர் அருகே தடுப்பு சுவரில் கார் மோதல் - குழந்தை, பெண் பலி
கரூர்:
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அகதிகள் முகாமை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருச்சியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இன்று அதிகாலை ஈரோடுக்கு புறப்பட்டனர்.
கரூர் மாவட்டம் பவித்திரம் அருகே செல்லும் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த பரமேஸ்வரி (வயது 60), ஆண்டனி பிளாசோ (3) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் கிளாரன்விமல் ராஜ், ரியன், சுதா உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த பரமேஸ்வரி, ஆண்டனி பிளாசோ உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகவில்லை. இவர் வெங்கமேடு புளியமரத்து பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது பின்னால் வந்த மினி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சங்கர் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெங்கமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்