என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே விஷம் குடித்து விவசாயி- பெண் தற்கொலை
Byமாலை மலர்15 Jun 2019 12:27 PM GMT (Updated: 15 Jun 2019 12:27 PM GMT)
நெல்லை அருகே பல்வேறு சம்பவங்களில் விவசாயி- பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த மேலபிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது47). இவர் அடிக்கடி மது குடித்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நாராயணன் நேற்று விஷம் குடித்தார்.
அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளை, கக்கன்நகரை சேர்ந்தவர் ஜெபராஜ். இவரது மனைவி முத்து லட்சுமி (38). ஜெபராஜ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது மனைவி முத்து லட்சுமி கணவரை சத்தம் போட்டார். ஆனால் ஜெபராஜ் தினமும் மது குடித்து விட்டு தான் வருவேன் என்று கூறி மனைவியை தாக்கினாராம். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி கடந்த 11-ந்தேதி விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X