என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூரில் பீர் குடித்த பெண் உயிரிழப்பு
வில்லியனூர்:
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சரோஜா. இவரது மகள் ஜமுனா (வயது 40). ஜமுனாவுக்கும், சேஷாங்கனூரை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஜமுனா கணவர் முருகனை விட்டு பிரிந்து வில்லியனூர் மணவெளியை சேர்ந்த கூட்டுறவு பால் சொசைட்டி ஊழியர் புருசோத்தமன் என்பவருடன் கடந்த 9 வருடமாக குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அவரை விட்டு பிரிந்து கடந்த 1½ ஆண்டுகளாக வில்லியனூர் கோட்டை மேட்டை சேர்ந்த கோபி என்பவருடன் வசித்து வந்தார்.
இருவருக்கும் குடிப் பழக்கம் இருந்து வந்தது. நேற்று இரவு கோபி வீட்டுக்கு பீர் வாங்கி வந்தார். அதனை ஜமுனாவுக்கு கொடுத்தார். பீரை வாங்கி குடித்த பின் ஜமுனா இரவு தூங்கி விட்டார்.
இன்று காலை பார்த்த போது, ஜமுனா இறந்து கிடந்ததை கண்டு கோபி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து பீர் குடித்ததால் ஜமுனா இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்