search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் மாவட்ட சிறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    விருதுநகர் மாவட்ட சிறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறை, கிளை சிறைகளில் காலியாக உள்ள சமையலர், துப்புரவு பணியாளர், பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    விருதுநகர்:

    மதுரை மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறை, கிளை சிறைகளில் காலியாக உள்ள சமையலர் (1), துப்புரவு பணியாளர் (4), பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்ச வயது தகுதி 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் உள்ளது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 2 வருடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினருக்கு 5 வருடங்களும் சலுகை உண்டு. முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை.

    சமையலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும், சமையல் பணியில் இரண்டாண்டுக்கு குறையாத அனுபவமும், துப்புரவு பணியாளர் பணிக்கு தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதும் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தற்போது நடைமுறையில் உளள அரசு ஊதிய விகிதங்கள் பொருந்தும்.

    தகுதியுள்ள நபர்கள் தங்களது கல்வி, சாதி மற்றும் பிற தகுதி சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பத்தினை சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை, மதுரை-16 என்ற முகவரிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மதுரை அரசு சிறைத்துறை துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×