என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி
Byமாலை மலர்15 Jun 2019 5:52 AM GMT (Updated: 15 Jun 2019 5:52 AM GMT)
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக சசிகலாவின் உறவினர் இளவரசியின் மருமகன் பெயரில் ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் சேலத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் 2016-ம் ஆண்டு வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பினேன். அப்போது ராஜேந்திரன் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் சசிகலாவின் உறவினர் இளவரசியின் மருமகன் என்று கூறினார்.
அதை நம்பிய நான் எனக்கு அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட்டு வாங்க சிபாரிசு செய்யும் படி கேட்டேன். அதற்கு அவர் ரூ.5 கோடி கொடுத்தால் நிச்சயம் சீட் வாங்கித் தருவதாக கூறினார்.
அதை நம்பிய நான் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பூங்காவில் வைத்து 2 தவணையாக ரூ.5 கோடி கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்துவிட்டார். எனவே சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி இருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முடிவில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகி உரிய தீர்வு பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சென்னை ஐகோர்ட்டில் சேலத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் 2016-ம் ஆண்டு வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பினேன். அப்போது ராஜேந்திரன் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் சசிகலாவின் உறவினர் இளவரசியின் மருமகன் என்று கூறினார்.
அதை நம்பிய நான் எனக்கு அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட்டு வாங்க சிபாரிசு செய்யும் படி கேட்டேன். அதற்கு அவர் ரூ.5 கோடி கொடுத்தால் நிச்சயம் சீட் வாங்கித் தருவதாக கூறினார்.
அதை நம்பிய நான் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பூங்காவில் வைத்து 2 தவணையாக ரூ.5 கோடி கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்துவிட்டார். எனவே சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி இருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முடிவில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகி உரிய தீர்வு பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X