search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
    X

    மீஞ்சூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

    மீஞ்சூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆயின. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த முரிச்சம்பேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். நேற்று இரவு அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் வெங்கடேஷ் தனது குடிசை வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்து விட்டு குடும்பத்துடன் வெளியே தூங்கினார்.

    நள்ளிரவில் மண் எண்ணை விளக்கில் இருந்த தீ திடீரென குடிசை வீட்டில் பற்றியது. அப்போது அங்கிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதில் அருகில் இருந்த கோலப்பன், கார்த்திக், ராம்குமார் ஆகியோரது வீடுகளுக்கும் தீ பரவியது.

    அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் 4 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தன.

    இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×