என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
Byமாலை மலர்13 Jun 2019 6:38 AM GMT (Updated: 13 Jun 2019 6:38 AM GMT)
மீஞ்சூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆயின. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த முரிச்சம்பேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். நேற்று இரவு அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் வெங்கடேஷ் தனது குடிசை வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்து விட்டு குடும்பத்துடன் வெளியே தூங்கினார்.
நள்ளிரவில் மண் எண்ணை விளக்கில் இருந்த தீ திடீரென குடிசை வீட்டில் பற்றியது. அப்போது அங்கிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் அருகில் இருந்த கோலப்பன், கார்த்திக், ராம்குமார் ஆகியோரது வீடுகளுக்கும் தீ பரவியது.
அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் 4 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தன.
இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X