என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தந்தையுடன் சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலி
Byமாலை மலர்13 Jun 2019 6:27 AM GMT (Updated: 13 Jun 2019 6:27 AM GMT)
திருவள்ளூர் அருகே தந்தையுடன் சென்றபோது மோட்டார் சைக்கிள்ல விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் கீர்த்திகா (19). இவர் திருப்பாச்சூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இன்று காலை கீர்த்திகா தந்தை சீனிவாசனுடன் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்றனர்.
புல்லரம்பாக்கம் கிருஷ்ணா கால்வாய் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சீனிவாசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீர்த்திகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்ததும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் கீர்த்திகா (19). இவர் திருப்பாச்சூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இன்று காலை கீர்த்திகா தந்தை சீனிவாசனுடன் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்றனர்.
புல்லரம்பாக்கம் கிருஷ்ணா கால்வாய் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சீனிவாசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீர்த்திகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்ததும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X