search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    சாத்தான்குளத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    சாத்தான்குளத்தில் அரசு கருவூலக நிர்வாக பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தில் அரசு கருவூலக நிர்வாக பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தான்குளம் சார் கருவூலக அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாத்தான் குளம் வட்ட அரசு ஊழியர் சங்கத்தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். 

    இதில் மாவட்ட அனைத்து துறை ஓய்வூதியர் சங்க இணைச்செயலாளர் ஜெயபால், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்க செயலாளர் செந்தூர் ராஜன், ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் சங்கத்தலைவர் அந்தோணி தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பேசினார்கள்.கருவூலக நிர்வாக பணிகளை தனியார் நிறுவனத்தினரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதால்,  இந்த பணிகள் நிரந்தர ஊழியர்களிட மிருந்து பறிக்கப்பட்டு ஒப்பந்த தொழிலாளர்களிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படும். இதனால்  நிரந்தர தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்படும் நிலை உண்டாகும் என்பதால் கருவூலக பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று வலியுறுத்தினார்கள். 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் வட்ட அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் பொன் சேகர் நன்றி கூறினார்.
    Next Story
    ×