என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூர்: மதுவில் விஷம் கலந்து குடித்த கூலி தொழிலாளி மரணம்
Byமாலை மலர்12 Jun 2019 4:55 PM GMT (Updated: 12 Jun 2019 4:55 PM GMT)
அரூர் அருகே தொழிலாளி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள எலபுளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது50). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியில் சென்ற மனோகரன் மதுவில் எலிமருந்து கலந்து குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர் வீட்டிற்கு வந்து கதவை அடைத்து படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது உறவினர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவை மனோகரன் வெகு நேரமாகியும் திறக்கவில்லை.
இதனால் பதறி போன உறவினர்கள் கதவை உடைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றனர். பின்னர் மனோகரன் நான் மதுவில் எலிமருந்து கலந்து குடித்து விட்டேன். அதனால் நான் சாகபோரேன் என்றார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X